யாழ் மகாஜனா மாணவிகள் தேசிய உதைப்பந்தாட்ட அணியில்

திங்கள், 30 ஜூலை, 2018

இலங்கையின் 14 வயதுப் பெண்களின் உதைப்பந்தாட்ட அணியில் மகாஜனக் கல்லூரி மாணவிகளான ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகிய மூன்று மாணவிகளே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியினர் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி
 பூட்டானில் ஆரம்பிக்கும் ஆசிய உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரில் பங்குபற்றவுள்ளனர்.
இம் மாணவிகளை பாடசாலை மட்டத்தில் வீராங்கனைகளை பயிற்றுவித்து தேசிய அணியில் இடம்பிடிக்க வைத்த உடற்கல்வி ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமான ச.செந்தூரன், மற்றும் கல்லூரி மேலதிக பயிற்றுநாராக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் பழைய மாணவனுமான தி.புருசோத்தமன் ஆகியோர் பயிற்றுவித்தனர்.
மகாஜனாவின் 14 வயதுப் பெண்கள் அணி கடந்த வருடம் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம் பெற்றமையும் 
குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக