கோரவிபத்து வவுனியாவில் 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

புதன், 1 ஆகஸ்ட், 2018

வவுனியாவில் கோர விபத்து! 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தும் அதே திசையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர 
வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த 9பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஓர் மாணவி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போதே
 விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக