உடுப்பிட்டியில் பகுதியில் கொள்ளையார்கள் அட்டகாசம்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018


உடுப்பிட்டி சந்நிதி கோவில் வீதி வாசிகசாலைக்கு அருகில் இன்று அதிகாலை 1 மணியளவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதிகளைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கி பெருமளவு பணம், பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத்
 தெரியவருகின்றது. அதிகாலை ஒரு மணியிலிருந்து 4 மணி வரை கொள்ளையர்கள் குறித்த வீட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்துள்ளனர். குறித்த தம்பதிகள் உறவினர் ஒருவருக்கு
 அப்பகுதியில் வீடு ஒன்று கட்டி வருவதாகவும் அதற்காக வங்கியிலிருந்து நேற்று பணம் எடுத்து வந்த பின்னரே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிப பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக