சுன்னாகத்தில் கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட பெண்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயது பெண்ணொருவர். 
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூராவத்தை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்டனர். 
உடனே சுதாகரித்துக்கொண்ட குறித்த பெண் சங்கிலியை அறுத்த கொள்ளையனின் ரீ - சேர்ட்டை எட்டி பிடித்துக்கொண்டார். அதனால் கொள்ளையர்கள் நிலை தடுமாறிய போது , கொள்ளையர்கள் அறுத்த சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார். அத்துடன் கொள்ளையர்களின் கையடக்க தொலைபேசியையும் அவர்களிடம் இருந்து 
எடுத்துள்ளார். 
அந்நிலையில் கொள்ளையர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெண் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் தன்னால் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசியையும் பொலிசாரிடம் கையளித்துள்ளார். 
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , கையடக்க தொலைபேசி ஊடாக கொள்ளையர்களை இனம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் 
தெரிவித்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக