வாள் வெட்டு உரும்பிராயில் மூவர் படுகாயம்

வியாழன், 12 ஜூலை, 2018

யாழ்.உரும்ராய் – கோப்பாய் வீதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை புகுந்த இனம் தெரியாத நபர்கள் அங்கிருந்த மூன்று பேரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த பெறுமதியான நகைகளையும் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அங்கிருந்த பெண்களின் நகைகளை பறித்ததுடன் அங்கிருந்த மூவரை வாள்களால் வெட்டிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டுள்ளதுடன்
அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இன்று காலை ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக யாழில் வேகமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை அனைவரது மத்தியிலும் பாரிய அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக