கைதடி கொங்கறீட் பாலம் மக்கள் பாவனைக்காக

புதன், 4 ஜூலை, 2018

யப்பானிய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கைதடி கொங்கறீட் பாலம் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் (03) முற்பகல் 10 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை (A9) வீதியில் கைதடிப் பகுதியில் அமைந்துள்ள இரும்புப் பாலத்திற்கு மாற்றீடாக அமைக்கப்பட்ட கொங்கரீட் பாலமே இவ்வாறு திறந்துவிடப்பட்டது.
பாலத்தில் நடந்த பொங்கல், பூஜை வழிபாடுகளுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் ஒப்பந்த நிறுவனத்தினரும் இணைந்து மக்களின் பாவனைக்காக இதனைத் திறந்து விட்டனர்.
எவ்வாறாயினும் 10 ஆம் திகதி பலாலிக்கு வரவுள்ள   ரணில் விக்கிரமசிங்கவினால் இப்பாலம் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது.
விசேடமாக இப் பாலத்துடன் அமைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பாதைக்கான சமிக்ஞை குறியீடுகளும் அங்கு வரையப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இப்பாலத்தூடான வீதியிலேயே முதல் முறையாக இந்தக் குறியீடு வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக