குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண் வைத்தியசாலையில்

வியாழன், 5 ஜூலை, 2018

டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர். தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
தேயிலை மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு பெண் தொழிலாளி ஒருவரின் கால் தட்டுப்பட்டமையினால் கலைந்தது. இதனால் கலைபட்ட குளவிகள் ஆக்ரோசத்துடன் பறந்து மூவரைக்
 கொட்டியுள்ளது.
பாதிப்பிற்குள்ளான ஆறு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக ஹட்டன் பொலிஸார் மேலும் 
குறிப்பிடுகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக