வீசிய சூறைக் காற்றினால் யாழ் குடாநாட்டில் பல சேதங்கள்

திங்கள், 11 ஜூன், 2018

 ,யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று வீசிய சூறைக் காற்றினால், பல இடங்களிலும் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டது. உடுவில் லவ்லேன் பகுதியில் பனை மரம் முறிந்து உயர் மின் அழுத்த கம்பிகளில் வீழ்ந்தமையினால் அப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
இதேபோன்று வடமராட்சிப் பகுதியிலும் பனை முறிந்து வீழ்ந்ததில்மின்கம்பம் சேதமடைந்த்தோடு மின் தடையும் ஏற்பட்டது. குறித்த மின்தடை மாலையிலேயே சீர் செய்யப்பட்டது.
யாழ். நகரின் மத்தியில் பொருத்தப்பட்டிருந்த ஓர் விளம்பரப் பலகை முறிந்து வீழ்ந்த நிலையில் மக்களால் உடனடியாக இ.மி.சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அப்பகுதிக்கான மின் தடை ஏற்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டது.
சுன்னாகம் , மல்லாகம் போன்ற பகுதிகளில் வீதியோரம் நின்றிருந்த மரங்களின் கிளைகள் வீழ்ந்தமையினாலும் சிறிது நேரம்
 மின் தடை ஏற்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக