துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது

திங்கள், 18 ஜூன், 2018

யாழ் – மல்லாகம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் 16.06.2018.நேற்று வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிகழ்விற்கு வந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.அதன்போது அங்கு வந்த காவல்துறையினர் மோதலை
 கட்டுப்படுத்த முனைந்தபோது காவல்துறையினரின் துப்பாக்கியை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம்
 மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மோதலுடன் தொடர்புபடாத இளைஞர் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருக்கும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில், மல்லாகம் – குளமங்கால் பகுதியை சேர்ந்த 28 வயதான பாக்கியராஜா சுதர்சன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் காயமடைந்த மற்றும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மல்லாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக