கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

செவ்வாய், 5 ஜூன், 2018

யாழ் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா  (04.-06-2018.) கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார்
 தெரிவிக்கின்றனர். 


சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
நேற்று (03) இரவு கைதடி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 4 கிலோ கிராம் கஞ்சா கைப்ப
ற்றப்பற்றுள்ளது. 
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக