நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெள்ளி, 1 மார்ச், 2024

நாட்டில் லிட்ரோ நிறுவனம் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின் 
அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் 
போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் 
தெரிவித்தார்.
 இதேவேளை, லிட்ரோ நிறுவனம் பெப்ரவரி மாதத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யவில்லை .
 பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வையடுத்து, தற்போதுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு: 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 4,250 ரூபாயாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,707 ரூபாயாகவும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 795 ரூபாயாகவும் அறவிடப்படுகின்றன. 
 இதேவேளை, லாப் சமையல் எரிவாயு நிறுவனம் மார்ச் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை
என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக