நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

திங்கள், 6 மே, 2024

நாட்டில்வளிமண்டலவியல் திணைக்களம்.07-05-2024. நாளை  வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 
வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், 
அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம்  
அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.  
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 
வெப்பச் சுட்டெண் "கவனம்" கோரும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக