டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிதுள்ளன

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் 9 ஆயிரத்து 809 டெங்கு நோயாளர்களின் பதிவாகியுள்ளனர்.
கட்டுமானத் தளங்கள், பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள இடங்களாக
 கருதப்படுகின்றன.
40 முதல் 45 வீதமான கழிவுப்பொருட்கள் டெங்கு பரவுவதற்கு பங்களிப்பதாக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக