நாட்டில் பல இடங்களில் இன்று 5 மணி நேர மின்வெட்டு அமுலாக்கம்.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

இன்றைய தினமும் திட்டமிட்ட சுழற்சி முறையிலான மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்க‍ை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கமைவாக A,B,C ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை 4 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

ஏனைய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 9.45 மணிவரை 5 மணிநேரம் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள மின் துண்டிப்பை குறைந்தது மூன்று மாத காலத்திற்கு மேற்கொள்ள வேண்டி நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி பிரதேசங்களில் காணப்படும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அந்தப் பகுதிகளில் தற்போது உள்ள நீர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கே மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானதாக உள்ளதாகவும் 
மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கிணங்க மீண்டும் மழை வீழ்ச்சி ஏற்பட்டு மேற்படி நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மட்டம் அதிகரிக்கும் வரை தொடர்ச்சியாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும். மேற்படி பகுதிகளில் தற்போது எதிர்பார்க்கும் மழை வீழ்ச்சியை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்வரும் மே மாதம் அளவிலேயே மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக