நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

நாட்டில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதற்கமைய,
 ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.121 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 124 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேநேரம், 92 எல்.பீ ரக பெட்ரோல் லீட்டரொன்றிற்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், 184 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, 95 ஒக்டென் ரக பெட்ரோல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 213 ரூபாவுக்கு 
விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக