நாட்டில் முக்கிய 4 பொருட்களுக்கு தட்டுப்பாடு: அரசாங்கத்தின் தீர்மானம்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

இலங்கையில் இந்த முக்கியமான நான்கு வகையான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நாட்டில், கோதுமை மா, பால் மா, எரிவாயு மற்றும் சிமெந்து ஆகிய 4 முக்கிய பொருட்களுக்கே தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 4 வகையான பொருட்களை தவிர, ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்குவதற்காக அரச தலைவரால் நியமிக்கப்பட்ட குழு, முதல் தடவையாக குழுவின் தலைவரும், நிதி அமைச்சருமான 
பஷில் ராஜபக்ஷ (Basil Rajapaksa)
தலைமையில் நிதி அமைச்சில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (11-02-2022) கூடி, விடயங்களை ஆராய்ந்துள்ளது.இதேவேளை, பொருளொன்றின் விலை, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டதாக காணப்படுகின்றமையினால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதன்போது,
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 
‘விலைப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயப்படுத்தப்படவேண்டும்’ என்ற சட்டம் தற்போது நாட்டிற்குள் அமுலாகவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறியுள்ளார்.
இதனால், வர்த்தகர்கள் தமது விருப்பத்திற்கு பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர், நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், அத்தியாவசிய பொருட்களின் விலைகளையேனும், காட்சிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குள் காணப்படுகின்ற அந்நிய செலாவணி பிரச்சினையானது, தற்காலிக பிரச்சினை என கூறிய நிதி அமைச்சர், அதனூடாக மக்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக