யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு

புதன், 16 பிப்ரவரி, 2022

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா 15-02-2022.அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அதன் போது , ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களில் ஐந்து பேரின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. அவ்வாறு அறுக்கப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும் 8 அரை பவுண் நிறையடைய சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் 
தெரிவித்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக