நாட்டில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

திங்கள், 8 பிப்ரவரி, 2021

புதிய விலையின் பிரகாரம் கோதுமையினை விற்பனை செய்தால் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நட்டத்தை எதிர்க் கொள்ள நேரிடும்.ஆகவே நிர்ணயிக்கப்பட்ட புதிய விலையினை ஆறு அல்லது ஏழு ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
கூட்டுறவு சேவைகள்,சந்தைப்படுத்தல்,அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கும் பிரதான நிலை கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அமைச்சின் காரியாலயத்தில்
 இடம் பெற்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக