சர்ச்சையை ஏற்படுத்திய யாழ் புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021


யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினை தற்போது சீர்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த மாதம் யாழ் நகரப்பகுதியிலுள்ள முனீஸ்வரன் வீதியில் தூர பிரதேசங்களுக்கான பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
அதன் போது பேருந்து நிலையத்திலுள்ள மொழிப்பிரச்சினை அன்றைய நிகழ்வில் பிரஸ்தாபிக்கப்பட்டது.அந்த நிலையத்தை மாநகர சபை பொறுப்பெடுத்ததன் பின்னர் மாற்றியமைக்கப்படும் என்று
 கூறப்பட்டது.
இதன் பின்னர் முதல்வர் மணிவண்ணனின் உத்தரவிலும் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபனின் மேற்பார்வையின்கீழும் தற்போது பெயர்ப்பலகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக