முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் ஒன்பது இலட்சம் கொள்ளை

புதன், 17 பிப்ரவரி, 2021

 
வவுனியா - புளியங்குளம் பகுதியில்,17-02-2021, அன்று  முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் கொள்ளைஒன்பது இலட்சம்  ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம்  காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
,17-02-2021, அன்றைய தினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப்பணத்துடன் நபர் ஒருவர் 
சென்றிருந்தார்.
அவரை புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரால் புளியங்குளம் காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக