நாட்டில் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையா

வியாழன், 18 பிப்ரவரி, 2021

 நாட்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லை என்றால் பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பாடசாலைப் பகுதி யில்  விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம்
 அறிவித்துள்ளது .
கொரோனா தொற்று காரணமாகப்  பாடசாலைகள் மூடப்பட்டமையால் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப் பி வைக்கப்பட்டதாக இலங்கை ஆட்பதிவுத் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக
 தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள
 அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை
 யென் றால்,  பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பாடசாலைப் பகுதியில் விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் 
அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக