நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

சனி, 1 டிசம்பர், 2018

எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை  எதிர்வரும் 12 ஆம் திகதி 
நிறைவடையவுள்ளது. 
இந் நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4,561 பரீட்சை நிலையங்களும், 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் நாடு தழுவிய ரீதியில் 
அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல மாத்தறை சிலாபம் கொழும்பு மகசீன் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் 
அமைக்கப்பட்டுள்ளன. 
போராதனை போதனா வைத்திசாலை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக