எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

சனி, 1 டிசம்பர், 2018

சர்வதேச எச்.ஐ.வி தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டம் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த எச்.ஐ.வி விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ் நகரை மையப்படுத்தி இடம்பெற்றது.
யாழ் கடற்கரை வீதியில் அமைந்துள்ள
 சிறைச்சாலை
 வளாகத்திலிருந்து ஆரம்பமான எச்.ஐ.வி விழிப்புனர்வு நடைபவனி பண்ணை வீதி, வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ் பிரதான தபால் அலுவலகத்தில் நிறைவடைந்து அங்கு விழிப்புனர்வு செயற்பாடுகள் 
இடம்பெற்றன.
எச்.ஐ.வி குறித்து பொது மக்களை அறிவுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு யாழ் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் என பலர் இதில் 
கலந்துகொண்டனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக