உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது.
இந்த நிலையில் . படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை  மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
 இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் உடுவிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்யுலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
 பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
வீட்டிலே  வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து 
உடைக்கப்பட்டுள்ளன.
 தலைப்பகுதி,மற்றும் முகம் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன. கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் ( தாதிய உத்தியோகத்தர் - தெல்லிப்பளை வைத்தியசாலை) 
தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக