அச்சுவேலியில் புத்தக கடையொன்று தீப்பிடித்ததில் எரிந்து நாசம்

வெள்ளி, 28 டிசம்பர், 2018

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடமபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய மேலும் வருவதாவது,
இந்தப் புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியடையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள்
 கொண்டுவந்துள்ளனர்.
ஆனாலும் அங்கிருந்த பொருட்களும் அந்தக் கடையும் முற்றுமுழுதாக எரிந்துள்ளது. இதில் பல இலட்சம் ரூபா
 பெறுமதியான பொருட்கள் நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் எவையும் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >

0 கருத்துகள்:

கருத்துரையிடுக