அச்சுவேலி மக்களுக்கு23 வருடங்களின் பின்னர் விடிவு

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

யாழ் அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது
6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியே நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1995ஆம் ஆண்டு
 முதல் குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி
 இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
நான்கு வருட போராட்டங்களின் பின் காணிகள் மக்களுக்கு கிடைத்துள்ளன.மேலும், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணியே நேற்று 
விடுவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக