கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மிகவும் வேகத்துடன் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த மின்கம்பத்துடன் சடுதியாக மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  06.09.2018. பிற்பகல்-06.30 மணியளவில்
 யாழ்.வடமராட்சி துன்னாலை கடவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்
.துன்னாலை வேம்படிப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி காந்தீபன்(வயது-25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்றுப் பிற்பகல் யாழ்.துன்னாலையிலிருந்து குடவத்தைப் பகுதி நோக்கி அதிவேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச்
 சென்றுள்ளார்.
இதன் போது குடவத்தைப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பத்துடன் சடுதியாக மோதுண்டுள்ளது.சம்பவத்தில்
 படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லும் வழியில் 
உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் யாழ்.துன்னாலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக