சாவகச்சேரியில் உள்ள நிதி நிறுவத்தில் பணம் கொள்ளை

புதன், 19 செப்டம்பர், 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் இன்று காலை 8.30 மணி அளவில் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.சுமார் 18 லட்சம் 
ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.இன்று காலை வழமைபோலன நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு
 சென்றுள்ளான்.
உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக