அரச பேரூந்தில் மாட்டிய கஞ்ச வவுனியாவில் நடந்த திடீர் தேடுதல்

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து 
கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தை, வவுனியாவில் வைத்து பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர்
இதன்போது பயணப்பையில் கேரள கஞ்சாவினை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
.குறித்த நபர் இரணைமடு சந்தியிலிருந்து பேருந்தில் பயணித்ததாகவும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் நிறை மற்றும் பெறுமதி என்பவற்றை பின்னரே தெரிவிக்க முடியுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக குறித்த அரச பேருந்து நொச்சிமோட்டை பாலத்தடியில் தரித்து நின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக