இராணுவ வாகனம் மோதி சாவகச்சேரியில் இளைஞன் பலி

திங்கள், 26 மார்ச், 2018

சாவகச்சேரி ஏ9 வீதி புளியடி சந்தியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது

இந்த சம்பவம் இன்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும்  
தெரியவருகின்றது. 
விபத்தில் வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தை சேர்ந்த சிவயோகலிங்கம் மயூரன்(வயது 27) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இராணுவ வாகனத்தின் சாரதியின் 
அவதானமின்மையாலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கார் ஒன்றை மறித்துள்ளனர். இதன்போது, கார் சடுதியாக தனது பாதையில் நிறுத்தப்பட, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் காரினை விலக்கி செல்ல முற்பட்டுள்ளார்.
இந்நிலையில், பின்னால் வந்த இராணுவ பஸ் மோதி இளைஞன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதையடுத்து விபத்து இடம்பெற்ற இடத்தில் பெருந்திரளான மக்கள் கூடி சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது..

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக