தர்மகேணி பகுதியில் இராணுவவாகனம் மோதி கோர விபத்து

திங்கள், 19 மார்ச், 2018

பளையில் 18.03.2018. (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து
 நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக
 யாழ். போதனா வைத்தியசாலைக்கு 
அனுப்பப்பட்டார்.ஒரு
 பிள்ளையின் தந்தையான குணசீலன் ஜெசிந்தன் (29 வயது) என்பரே உயிரிழந்தவர் என்பதுடன் தர்மகுலசிங்கம் தர்மகுமார் (27 வயது) என்பவரேபடுகாயமடைந்தவராவார்.இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக