சிறுபோக செய்கையில் யாழ்.மாவட்ட விவசாயிகள் ஆர்வம்?

வெள்ளி, 26 மே, 2017

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரட், பீற்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் சிறுபோக மரக்கறிச் செய்கைகளாக விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளமையை அவதானிக்க
 முடிகிறது .
குறிப்பாக வலிகாமத்தில் . நவற்கிரி ,சிறுப்பிட்டி .ஆவரங்கால் அச்சுவேலி தோப்பு ஏழாலை,குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வசாவிளான், ஈவினை, மயிலங்காடு, சுன்னாகம்,இணுவில் .மருதனார்மடம், அச்செழு, புத்தூர், கோப்பாய், நீர்வேலி, இருபாலை, கோண்டாவில், உரும்பிராய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளிலில் சிறுபோக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக