இலங்கையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை வெளிவந்த முக்கிய தகவல்

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

¨

இலங்கையில் தொற்றுநோய் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என வெளி மாகாண வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது
நிகவெரட்டியவில் நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கத்தின் அழைப்பாளர் காமினி கந்தேகெதர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெதுப்பக பொருட்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே முடிவு 
செய்திருந்தது.
அதன்படி, பாணின் விலையை 5 ரூபாவாலும், ஏனைய பொருட்களின் விலை 10 ரூபாவாலும், 1 கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவிருந்தன.
எனினும் பொது மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து வெதுப்பக உரிமையாளர்களையும் வெளிமாகாண வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் 
கோரியுள்ளார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வால, வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியது அவசியம், ஆனால் இது அவ்வாறு செய்ய ஏற்ற நேரம் அல்ல என்று சங்கம் கருதுகிறது என்று சங்கத்தின் அழைப்பாளர் காமினி கந்தேகெதர குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் இன்றைய தினம் முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக