நாட்டில் இன்று வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

புதன், 4 ஆகஸ்ட், 2021

இலங்கையின் வானிலையில் இன்று சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்தில் மழை பெய்யும். அதேநேரம் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய இடங்களில் பொதுவான வானிலை நிலவும். மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக