தேசிய பாடசாலைகளாக யாழில் 10 பாடசாலைகள் தரமுயர்வு

வியாழன், 21 ஜனவரி, 2021

ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக
 தரமுயர்த்தப்பட்டுள்ளன.
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பரிந்துரையின் கீழ் 10 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி தீவக கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வலிகாமம் கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வடமராட்சிக் கல்வி வலயத்தில் 2 பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் வருமாறு:
01. ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி
02. வேலணை மத்திய கல்லூரி
03. நெடுந்தீவு மகா வித்தியாலயம்
04. காரைநகர் இந்துக் கல்லூரி
05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
06. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
07. சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி
08. புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி
09. பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
10. உடுத்துறை மகா வித்தியாலயம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக