அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

புதன், 31 ஜனவரி, 2018

கடந்த 5 ஆண்டு காலத்தில் தொடர்ந்தும் வருமான அனுமதிப் பத்திரங்களை பெறாத வாகனங்கள் பயன்பாட்டில் இல்லை என கருதி அவற்றுக்கான ஆவணங்கள் அப்புறப்படுத்த அமைச்சரவை அனுமதி 
வழங்கியுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளை கொண்ட குழுவின் ஆய்விற்கு பின்னர் இந்த ஆவணங்கள்
 அப்புறப்படுத்தப்பட உள்ளன.
அத்துடன் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் காலத்தில் அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு
 பயன்படுத்துவதை தடுக்க தேவையான ஏற்பாடுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தவிர கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கவும் அமைச்சரவை 
அனுமதி வழங்கியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக