அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு:

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறவிருக்கின்ற 70ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுக்கு அமைவாக, சதோச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக்
 குறைத்துள்ளது என சதோச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார்.சதோச நிறுவனத்தின் ஊடாக சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் 
என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதோடு, மக்கள் இதன் மூலம் பாரிய அளவில் நன்மையடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி;
ஒரு கிலோ பாஸ்மதி அரிசி 120 ரூபாவிற்கும்
ஒரு கிலோ அரிசி 60 ரூபாவிற்கும்
500 கிராம் பெரிய வெங்காயம் 55 ரூபாவிற்கும்
500 கிராம் செத்தல் மிளகாய் 110 ரூபாவிற்கு
500 கிராம் பருப்பு 54 ரூபா 50 சதத்திற்கும்
விற்பனை செய்யப்படுவதாகவும், சதோச நிறுவனத்தின் 
பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக