காணாமற்போன குடும்பஸ்தர் யாழில் எலும்புக்கூடாக இன்று மீட்பு

சனி, 17 பிப்ரவரி, 2018

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளார்.
எழுதுமட்டுவாள் தெற்கு காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம்சுரேஸ்குமாா் வயது 56 என ஆடையாளம் காணப்பட்டுள்ளாா்.
சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது, கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து உறவினரது திருமணத்திற்காக கொழும்பு செல்லதற்காக கூறிச் சென்றுள்ளாா்.
இவ்வாறு ஒரு வாரமாக காணாமல் போயிருந்த இவா், இன்று காலை எழுதுமட்டுவாள் நாகா்கோயில் குளத்துக்கு அருகில் எரிந்து எலும்புக்கூடாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளாா்.சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு 
வருகின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக