முழங்­கா­வில் ஜேசிபியின் கீழ் சிக்கி நசியுண்டு மாணவன் பலி

புதன், 10 ஜனவரி, 2018

வேக­மாகப் பய­ணித்த ஜேசிபி வாக­னம் திடீ­ரெ­ னத் தடம்­பு­ரண்­டது. அதில் நசி­யுண்ட மாண­வன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.இந்­தக் கோரச் சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, முழங்­கா­வில்
 கண்­ணண் ஆல­யப் பகு­தி­யில் நடந்­துள்­ளது. முழுங்­கா­வில் தேசிய பாட­சா­லை­யில் கல்வி கற்­கும் உத­ய­காந்­தன் பிர­சாந்த் (வயது-15) என்ற மாண­வனே உயி­ரி­ழந்­தான்.
பிர­சாந்த் வழமை போன்று தனி­யார் கல்வி நிலை­யத்­துக்­குச் சென்­று­விட்டு நண்­பர்­க­ளு­டன் வீடு திரும்­பி­ய­போதே இந்த அசம்­பா­வி­தம் நடந்­துள்­ளது. நண்­பர்­கள் தப்­பிக்­கொள்ள பிர­சாந்த் வாக­னத்­துக்­குக் கீழ் 
சிக்­கிக் கொண்­டுள்­ளான்.
தடம் புரண்ட வாக­னத்­தைத் தூக்­கு­வ­தற்கு வேறொரு ஜேசிபி வர­வ­ழைக்­கப்­பட்டு தூக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே மாண­வன் மீட்­கப்­பட்­டான் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக