பொலிஸாரின் நேர்மையை யாழில் கண்டு அசந்து போகும் தமிழ் மக்கள்!!

சனி, 20 ஜனவரி, 2018

யாழில் மாணவர் ஒருவரால் தவறவிடப்பட்ட பணப்பை ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு குறித்த மாணவரிடமே ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் 
உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.இதுகுறித்து மேலும் 
தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகருக்கு சென்று வீடு திரும்பியபோது, தனது பணப் பையினைத் தவறவிட்டமை தெரிந்து கதறி 
அழுதுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பணப் பை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ஆரம்பப் பாடசாலைக்கு முன்பாக இருப்பதுகண்டு, அந்த இடத்தில் போக்குவரத்துக் கடமையிலிருந்த பொலிஸ் 
உத்தியோகத்தர் ஒருவர் அதனை எடுத்துள்ளார்.குறித்த பணப்பையில் தொலைபேசி இலக்கம் ஒன்றும் இருந்துள்ளது. இதன்படி அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பெடுத்த குறித்த
 பொலிஸ் உத்தியோகத்தர் மாணவனின் குடும்பத்தினரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து
 ஒப்படைத்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக