அமைச்சரவை மதுபான விற்பனை குறித்த சுற்று நிருபத்தை ரத்துச் செய்ய அனுமதி

செவ்வாய், 16 ஜனவரி, 2018

பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் இரவு 10 வரையில் திறந்து வைத்தல் ஆகியன தொடர்பிலான சுற்று நிருபத்தை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த சுற்று நிருபத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு மதுபானம் விற்பைன செய்தல், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துதல், மற்றும் இரவு 10.00 மணி வரையில் மதுபான விற்பனை நிலையங்கைள 
திறந்து வைத்தல் ஆகிய தொடர்பில் நிதி அமைச்சினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.நிதி அமைச்சினால் 
வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக