பால் புரக்கேறியதில் இரண்டு மாத குழந்தை யாழில் உயிரிழந்துள்ளதூ

சனி, 20 ஜனவரி, 2018

பால் புரக்கேறியதில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பலரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணம், யாழ் வீதியை சேர்ந்த இரண்டு மாதங்களான தெய்வேந்திரம் சஞ்சி என்ற ஆண் குழந்தையே மேற்படி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாயார், நேற்று அதிகாலை 2 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு, குழந்தையை உறங்க செய்த பின்னர் தானும் உறங்கியுள்ளார்.
பின்னர் நேற்று காலை 7 மணிக்கு குழந்தையை எழுப்ப சென்ற போது, மூக்கினால் பால் வழிந்தபடி, குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது.
உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் 
தெரிவித்தனர்.
இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி, நமசிவாயம் பிறேம் குமார் 
மேற்கொண்டிருந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக