பிச்சையெடுத்து நூதனமான முறையில் கொள்ளையடித்த பெண் கைது

சனி, 9 டிசம்பர், 2017

பேருந்துகளில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையடிக்கும் இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.பல்வேறு நோய்களுடன் உள்ள நபர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என கூறி பயணிகளின் பேருந்துகளுக்குள் போலியாக பணம் சேகரித்து, பயணிகளின் பைகளை இளம் பெண்ணொருவர் கொள்ளையடித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.அம்பலந்தொட்டை மற்றும் குட்டிகல பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டில் 
இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.மாத்தறையில் இருந்து எம்பிலிப்பிட்டிய வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண்ணின் பணப்பை நேற்று பகல் திருடப்பட்டுள்ளது.இதன் போது, பேருந்தில் பணம் சேகரித்து கொண்டிருந்த இருவர் மீது 
சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், குட்டிகல பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் வீட்டை தேடி சென்றுள்ளனர்.அதற்கமைய அந்த இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டிருந்த நபர் தப்பி சென்ற நிலையில் அதற்கு தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.ஊனமுற்ற தனது தந்தை மற்றும் ஊனமுற்ற சிறுவர்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கூறி பண மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில் நீண்ட காலமாக குறித்த பெண்இ அவரது கணவர் மற்றும் சகோதரர்
 ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய வீட்டினுள் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் புகைப்படங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக