இடம்பெற்ற விபத்துக்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 3 விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்
.இதற்கு மேலதிகமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.தலங்கம, கடவத்தை மற்றும் மொரகஹஹேன
 ஆகிய பிரதேசங்களில் குறித்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.தலங்கம பிரதேசத்தில் ஜுப் வண்டி ஒன்று பாதையில் சென்ற இருவரை மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.இவ்வாறு விபத்துக்குள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
 உயிரிழந்துள்ளனர்.
பின்னர் ஜுப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குடிபோதையில் இருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கடவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்றவர் மீது மோதியமையினால்
 வீதியில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.மெரகஹஹேன பிரதேசத்தில் வேன் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக