அறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பணிப்பாளர் சபையை நியமிப்பதற்காக அவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை,ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றே நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
தெரிவித்துள்ளார்.
பிணை முறி விநியோக மோடி தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் இந்த ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி 
குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவானது ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இன்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ஆறு பேர் இராஜினாமா செய்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக