அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சலால் 9பேர் உயி­ரி­ழந்­தனர்.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர்.
திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது.
முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட 9 பேரும் உயி­ரி­ழந்­த­னர் என்று 
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கவ­னத்­துக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு மற்­றும் ஆய்­வ­கத்­தின் கவ­னத்­துக்கு அதனை சுகா­தா­ரத் திணைக்­க­ளம் 
கொண்டு சென்­றது.
இத­னை­ய­டுத்தே முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. அத்­து­டன் தடுப்பு நட­வ­டிக்­கை­யும் முன்­னெ­டுக் கப்­பட்டு
 வரு­கின்­றது.
இதே­வகை காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட இரு­வர் முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு 
மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.
இந்த விட­யம் தொடர்­பில் மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ளர் வைத்­தி­யக் கலா­நிதி ஆ.கேதீஸ்­வ­ரனை தொடர்பு கொண்டு கேட்­ட­போது, “இது தொடர்­பில் எமது கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது.
எமது மருத்­து­வக் குழு முத­லில் ஆய்­வு­களை மேற்­கொண்­டது. அதே நேரம் கொழும்பு சுகா­தார அமைச்­சுக்­கும் தக­வல் வழங்­கப்­பட்­டது.
அத­ன­டிப்­ப­டை­யில் கடந்த இரு தினங்­க­ளாக முல்­லைத்­தீ­வில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.
காய்ச்­ச­லுக்கு கார­ண­மான வைரஸை அடை­யா­ளம் காணும் முயற்சி வேக­மாக இடம் பெற்று வரு­கின்­றது என்­றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக