விண்வெளித் துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சாதனை படைத மாணவன்!!

சனி, 30 டிசம்பர், 2017

விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால் அத்துறையானது எமது நாட்டில் இல்லை.முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவ

 தேர்ச்சி பெற்று எனது இலக்கை ஒருநாள் அடைவேன் என, இயற்பியல் கணிதப்பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய மாணவன் டெனிசியஸ் ஜென் ரெம்சியஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கும் போது;நான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த 
ஆசிரியர்கள், அதிபர், நண்பர்கள், குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான் என்னை
 இந்தநிலையை அடையவைத்தது.மன்னார் மாவட்டத்தில் இயற்பியல் கணிதப்பிரிவில் 2 ஏ.பி சித்தியை பெற்று மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளேன்.விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால் அத்துறையானது 
எமது நாட்டில் இல்லை. முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவ தேர்ச்சி பெற்று எனது இலக்கை ஒருநாள் அடைவேன்.என அந்த மாணவன் மகிழ்ச்சி தெரிவித்தார்.இவர் வங்காலை 01 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு திருமதி டெனிசியஸ் ஆன் லக்சிக்கா தம்பதிகளின்
 புதல்வனாவார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக