நாட்டில் அடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு!

வெள்ளி, 15 டிசம்பர், 2017

அடுத்த சில நாட்களுக்கு இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இலங்கையின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த திணைக்களம் 
கூறியுள்ளது.
இதேவேளை அவ்வாறு தொடர்ந்து மழை பெய்தால் மண்சரிவு குறித்து பொது மக்கள் கூடிய அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக காலி மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில இடங்களுக்கும் மலையகத்தின் பல பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக