கட்டுரை வரைதல் போட்டியில் முல்லை மாணவி சாதனை.

புதன், 13 செப்டம்பர், 2017

தேசிய மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவியான  பகீரதன் லாசன்ஜா பிரிவு -2 ல் இருந்து   பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றிருந்தார்.
கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய ரீதியாக   நடாத்தப்பட்ட    தமிழ்தின போட்டியில்  கலந்து கொண்டிருந்தார். இம் மாணவியின் சாதனை குமுழமுனை ம.வி க்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்திருக்கின்றது.
இவர் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்பதோடு இவருக்கு பயிற்றுவித்த  ச.சந்திரசேகரம் ,திருமதி.ந.பாலநாதன் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம்
 வாழ்த்தி நிற்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக