கடந்த 13 ஆம் திகதி முதல் தொடரும் பணியாளர்களின் போராட்டம்…!

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

 தொடர்ச்சியாக இலங்கை மின்சாரசபை பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் நடைபெறுகின்றது.
    மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறியே இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
    மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லையென மின்வலுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ஊழியர்களின் இந்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய 
குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக